வட மாநிலங்களில் கடும் குளிர் அலை வீசி வருவதால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ, பல்லியா, கவுதம் புத்த நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.13 வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பனியின் காரணமாக கூடுதலாக விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஆக்ராவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க : https://itamiltv.com/andhra-jagan-mohan-reddy-to-unveil-tallest-ambedkar-statue-of-justice-in-vijayawada/
6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் காலை 11 மணி முதல் மாலை 3:30 மணி வரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் பீகார் தலைநகர் பாட்னாவில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 20-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
பிகார் மாநிலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பாட்னாவில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 20-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது