தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மீண்டும் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்திலேயே வடகிழக்கு பருவமழை நிறைவடைந்து விடும்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:
லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் வியாழக்கிழமை (நேற்று) பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.
வளிமண்டல கீழக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 8-ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் வரும் 9-ம் தேதி சில இடங்களிலும், 10, 11-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : https://itamiltv.com/trincomalee-jallikattu-competition-for-the-first-time-in-sri-lanka-raging-bulls/
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1743554967926137203?s=20
தேனி மாவட்டத்தில் வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் வினாடிக்கு 3100 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.