மதுரை மேலூர் அருகே உள்ள அரசு பள்ளியில் உள்ள மரம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 மாணவ, மாணவியர் காயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத்தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது . எதிர்ப்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த மாணவ மாணவியர் மேல் மரக்கிளைகள் விழுந்துள்ளது.
இதையடுத்து மரத்தடியில் சிக்கிக்கொண்ட மாணவ மாணவிகளை சகமானவர்க்ளும் ஆசிரியர்களும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில்
மரத்தடியில் அமர்ந்து கல்வி பயின்ற 16 மாணவ, மாணவியர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.