ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்த 500 ஆவது விக்கெட்டுக்கும் (500 – 501 Wicket) 501 ஆவது விக்கெட்டுக்கும் இடையில் நிறைய நடந்துவிட்டது என அஸ்வினின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தீவிரமாக விளையாடி வருகிறது .
இதுவரை இருக்கும் நிலவரத்தின் படி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வைக்கிறது வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்த தொடரின் 3 ஆவது டெஸ்ட் போட்டி அஸ்வின் உள்பட பல இந்திய வீரர்களுக்கு உணர்ச்சிகரமான அமைந்துள்ளது என்பதை மாற்றுக்கருத்து இல்லை .
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த (பிப்ரவரி 15) தேதி ராஜ்கோட்டில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கான் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் சர்பராஸ் கான் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.
இதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர்.
பின்னர் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 விக்கெட் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் எட்டினார்.
வெறும் 98 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள அஸ்வின் குறைந்த பந்துகளை (25,714) வீசி 500 விக்கெட்களை கைப்பற்றி அபார சாதனை படைத்தார் .
இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் அபாரமாக ஆடிய குட்டி புலி ஜெய்ஸ்வால் இரட்டை சத்தம் அடுத்து எதிரணியை மிரளவைத்தார் .
இந்த தொடரில் மட்டும் ஜெய்ஸ்வால் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் படைத்த சாதனைகளை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அஸ்வின் அஸ்வின் எடுத்த 500 ஆவது விக்கெட்டுக்கும் 501 ஆவது விக்கெட்டுக்கும் இடையில் நிறைய நடந்துவிட்டது என அஸ்வினின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
“ஹைதராபாத் போட்டியில் 500-வது விக்கெட்டை எதிர்நோக்கி இருந்தோம். அது நிறைவேறாத நிலையில் விசாகப்பட்டினம் போட்டியிலும் 500-வது விக்கெட் கிடைக்கவில்லை.
அஸ்வின் எடுத்த 499 ஆவது விக்கெட்டை வீட்டில் இனிப்பு பகிர்ந்து கொண்டாடினோம். 500-வது விக்கெட் அப்படியே அமைதியாக கடந்து சென்றது.
500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது. எங்கள் வாழ்வின் நீண்ட நெடிய 48 மணி நேரம் அது.
உங்களை நினைத்து நாங்கள் பெருமை (500 – 501 Wicket) கொள்கிறோம். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என அஸ்வினின் மனைவி ப்ரீத்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.