மறைத்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் (Captain House) இல்லத்தில் நடிகர் சூரி மனமுருக நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் .
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு தமிழகமே சோக கடலில் மூழ்கியுள்ளது.
இதையடுத்து கேப்டனின் உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அடுத்த நாள் டிசம்பர் 29 ஆம் தேதி மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் இல்லத்திற்கு வந்த நடிகர் சூரி விஜயகாந்தின் (Captain House ) திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி கூறியதாவது :
படப்பிடிப்பு காரணமாக வெளியூரில் இருந்தேன் விஜயகாந்த் சாருக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாதது குறித்து எனது வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவேன்.
கேப்டன் ஒரு நல்ல மனிதர் அவரை போல் இருக்க அனைவரும் முயற்சிப்போம் எதனை ஆறுதல் சொன்னாலும் அவரது குடும்பத்திற்கும் தமிழ் திரையுலகிற்கும் கேப்டனின் மறைவு பேரிழப்பு என சூரி தெரிவித்துள்ளார் .
இதேபோல் நடிகர் ஆதியும் ஆவரது மனைவியும் நடிகையுமான நிக்கி கல்ராணியும் கேப்டன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Also Read : https://itamiltv.com/chennai-book-fair-closed-for-one-day-today/
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆதி கூறியதாவது :
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவின்போது நானும் எனது மனைவியும் வெளிநாட்டில் இருந்தோம் எங்களால் உடனே கிளம்பி வர முடியவில்லை.
கேப்டனின் இறுதி பயணத்தில் பங்கேற்க முடியாதது மிகுந்த வேதகனை அளிக்கிறது அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம் என தெரிவித்தார்.