மறைத்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் (Actress Radha) நடிகை ராதா கண்ணீர்மல்க நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் .
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோக கடலில் மூழ்கடித்தது .
இதையடுத்து கேப்டனின் உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய செலுத்தினர் .
விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க நடிகர் ராதா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதையடுத்து இன்று சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் இல்லத்திற்கு வந்த நடிகை ராதா விஜயகாந்தின்திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த (Actress Radha) நடிகை ராதா கூறியதாவது :
கேப்டன் விஜயகாந்த் சார் ஒரு நல்ல மனிதர் அவரை போல் யாராலயும் இருக்க முடியாது .
படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் நன்றாக பார்த்துக்கொள்வார் . உதவி என்று வந்தவர்களுக்கு அவர் உதவாமல் இருந்ததே இல்லை .
Also Read :https://itamiltv.com/sks-ayalaan-movie-release-confirm/
எத்தனை ஆறுதல் சொன்னாலும் அவரது குடும்பத்திற்கும் தமிழ் திரையுலகிற்கும் கேப்டனின் மறைவு பேரிழப்பு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம் என நடிகை ராதா தெரிவித்துள்ளார்.
நடிகர் ராதா மற்றும் கேப்டன் விஜயகாந்த் இருவரும் அம்மன் கோவில் கிழக்காலே, மனக்கணக்கு ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.