நடிகை சிந்து (actress sindhu), அங்காடி தெரு படத்தில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், சிந்து தற்போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில், உணவின்றி தவித்து வந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த சேவை மனம் படைத்த சிந்து, தற்போது கேன்சர் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய நிலையை விவரித்துள்ளார்.
அந்த பேட்டியில், கடந்த 2020-ம் ஆண்டு எனக்கு கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் என்னுடைய மார்பகங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில், நாட்டு மருத்துவம், ஆங்கில மருத்துவம் என பல வைத்தியம் பார்த்தும் இதிலிருந்து மீள முடியவில்லை.
இதற்காக, மருத்துவர்களையும் குறைசொல்ல முடியாது. அவர்கள் நன்றாக தான் சிகிச்சை எனக்கு சிகிச்சை அளித்தார்கள். ஆனால், சிகிச்சைகள் என் உடலுக்கு தான் ஒத்துழைக்கவில்லை.
எனக்கு கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவுடன் 3 ஆண்டுகள் என்னை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், நான் உழைத்தால் தான் என் குடும்பம் சாப்பிட முடியும் என்ற நிலையில், என்னால் எப்படி ஓய்வு எடுக்க முடியும்.
மேலும், தற்போது எனது மகளும் வேலையில்லாமல், கை குழந்தையுடன் கஷ்டப்படுகிறாள், அவளையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். இப்படி, தினம் தினம் வலியால் கஷ்டப்பட முடியவில்லை. எனக்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என மருத்துவர்களிடம் கூட கேட்டு பார்த்தேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த பேட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்று எனது சிகிச்சைக்கும், எனது மகளுக்கு அரசு வேலையும் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஷகிலா, நடிகர் பிளாக் பாண்டி, ஜெயலட்சுமி என பலரும் தனக்கு அவ்வப்போது உதவி வருவதாகவும், இதற்கெல்லாம் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார் சிந்து (actress sindhu).