திமுக ஒரு நடைபயணம் சென்றால், அதன் பெயர் ‘என் மகன் என் பேரன்’ என்பதாகத்தான் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார் .
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை நிகழ்வு நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. இந்த நடைப்பயணத்தில் , எச்.ராஜா சிவகங்கை மாவட்டத் தலைவர் சக்தி உளப்பட பல பாஜக பிரமுகர்கக்ள் கலந்துகொண்டனர் .

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை கூறிருப்பதாவது :
மக்களைச் சந்தித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது ஒன்பதாண்டு கால சாதனைகளைக் கூறும் நமது பயணத்தின் பெயர் ‘என் மண் என் மக்கள்’. மத்திய அரசின் மக்களுக்கான நலத்திட்டங்கள், அதன் மூலம் பயனடைந்த இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள் என கோடிக்கணக்கானோர் நம்மோடு இருக்கிறார்கள்.

ஆனால், திமுக ஒரு நடைபயணம் சென்றால், அதன் பெயர் ‘என் மகன் என் பேரன்’ என்பதாகத்தான் இருக்கும். சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்து ஊழலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது திமுக.என அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .