TNCM Speech : புது மாவட்டங்களை அறிவிப்பது பெரியது அல்ல அந்த மாவட்டங்களுக்கான தேவையான உட்கட்டமைப்புகளை அமைத்து தருவதுதான் பெரியது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு நேற்று ரயிலில் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை, மன்னம்பந்தலில் ஏழு தளங்களுடன் 2,82,883 சதுர அடி பரப்பளவில் 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார் .
இதையடுத்து மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.655 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பின்னர் மேடையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
பல்வேறு புதிய மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டது . தஞ்சை மாவட்டத்தில் திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டடம் கட்டப்படும்.
சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உப்பு நீர் புகுவதை தடுக்கும் வகையில் கடைமடை நீர் ஒடுங்கிகள் அமைக்கப்படும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.30 கோடி செலவில் வானகிரி மீன்பிடி தளம் மேம்படுத்தப்படும்.
நாகை மாவட்டம் சிறுதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் கரை பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்தார்.
Also Read : https://itamiltv.com/rameswaram-cafe-blast-case-nia-investigation/
தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள். வாக்கு மட்டும் போதும் என்று நினைத்து தமிழ்நாட்டுக்கு மோடி வருகிறார்
தமிழ்நாட்டில் ஏற்பட்ட 2 இயற்கை பேரிடர்களுக்கு (TNCM Speech) 1 பைசா கூட நிதி தரவில்லை என முதலவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.