VAXZERVIA வகை கொரோனா தடுப்பூசிகளை வணிக காரணங்களுக்காக திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
VAXZERVIA வகை கொரோனா தடுப்பூசிகளை திரும்ப பெறுவது குறித்து அஸ்ட்ராஜெனகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
புதிய வகை கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ளும் வகையில் அப்டேட் செய்யப்பட்ட தடுப்பூசிகள் அதிகளவில் சந்தையில் உள்ளன. இதனால் Vaxzervia தடுப்பூசிக்கான தேவை எழவில்லை . இந்த தடுப்பூசிகளின் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஏற்கனவே நிறுத்திவிட்டோம் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
அண்மையில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியால் மிகவும் அரிதான சூழல்களில் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.