CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் (cbse board exam) இன்று முதல் தொடங்குகிறது…
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் (cbse board exam) இன்று தொடங்க உள்ளதை அடுத்து, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்க உள்ளன.
மேலும், 10ஆம் வகுப்புகளுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைப்படிப்பு பாடங்களுக்கான தேர்வும் இன்று தொடங்குகிறது எனவும், மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பாடத்தேர்வும் இன்று முதல் தொடங்க உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 21,86, 940 பேர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்வு எழுதுகின்றனர். இதில், 12,47, 364 மாணவர்களும், 9, 39, 566 மாணவிகளும், இதர பிரிவினர் 10 பேரும் தேர்வெழுத உள்ளனர். மேலும், நாடு முழுவதும் 7,240 மையங்களில் இத்தேர்வு நடைபெறும் நிலையில், மார்ச் 21ந் தேதி தேர்வுகள் முடிவடைய உள்ளது.
தேர்வுகள் காலை 10 முப்பது மணிக்கு தொடங்கி, பகல் 12.30 வரை தேர்வு நடைபெறம் எனவும், சில தேர்வுகள் மட்டும் 1.30 மணி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வரவேண்டும் என்றும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வினாத்தாள் படித்துப் பார்க்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், தேர்வர்கள் அனைவரும் மேற்கண்ட விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.