போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் (sadha) தற்போது கூட்டாளியான சதா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் வெளியிட்டிருந்தனர்
இதையடுத்து தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின்னர் ஜாபர் சாதிக்கை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் வட மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது அவரது சக கூட்டாளியான சதானந்தத்தை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னையில் கைதுசெய்யப்பட்ட சதானந்தத்தை டெல்லிக்கு கூட்டிச்சென்று (sadha) விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துளள்னர்.