செந்தில் பாலாஜியை ஜாமினில் (bail case) வெளியே விட்டால் சாட்சிகளை அவர் அச்சுறுத்தக்கூடும் என அமலாக்கத்துறை வாதம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்துக்கழகத்தில் பணி வாங்கி தருவதாக பணம் பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் தொடர முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்திருந்தார்.
செந்தில் பாலாஜி சிறையில் உள்ள போதும் எந்த இலக்காக்களும் ஒதுக்கப்படாமல் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்தது வந்தார்.
தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி ஏற்கெனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்தது.
இந்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் (bail case) கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
8 மாதங்களாக சிறையில் உள்ள சூழலில் தனது அமைச்சர் பதவி ராஜினாமா தொடர்பான கடிதத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சருக்கு செந்தில் பாலாஜி அனுப்பி வைத்தார்.
இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் அனுப்பிவைத்தார். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.
இதையும் படிங்க : பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ!- கோவை மாவட்ட எஸ்.பி. விளக்கம்!
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அமைச்சராக இருப்பவர் வெளியில் வந்தால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை கலைப்பார் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து நீதிமன்றங்களில் வலியுறுத்தி வந்த நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1757706224374612187?s=20
இது குறித்த வழக்கு இன்று நடந்து வரும் நிலையில் செந்தில் பாலாஜியை ஜாமினில் வெளியே விட்டால் சாட்சிகளை அவர் அச்சுறுத்தக்கூடும் என அமலாக்கத்துறை வாதம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார், எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறும் செந்தில் பாலாஜி தான் வழக்கின் விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்தி வருகிறார் என அமலாக்கத்துறை வழக்கறிஞர் வாதிட்டு உள்ளார்