தமிழ்நாடு அரசு சார்பில் மதுரையில் நடைபெற்ற மராத்தானில் பங்கேற்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ‘உதிரம் 2023’ என்ற தலைப்பில் ரத்த தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது .
நேற்று காலை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மராத்தான் போட்டியில் பங்கேற்ற, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தினேஷ் என்ற கல்லூரி மாணவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரசு சார்பில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த செய்தியறிந்து பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
விடியா திமுக அரசின் சுகாதாரத்துறை சார்பில் மதுரையில் நடைபெற்ற குருதிக்கொடை மாராத்தான் விழிப்புணர்வுபோட்டியில் பங்கு பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் தினேஷ் திடீரென மயங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், அவரது குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.