எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவர்க்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள பொதுமக்கள் அத்யாவசிய தேவைகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர் .
இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் நியமித்திருந்தார் அந்தவகையில் தற்போது அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கள ஆய்வு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர் .
இதுமட்டுமின்றி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது . இந்நிலையில் எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவர்க்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருபத்தாது :
- மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரப்படும் நிவாரணத் தொகையை ₹6000ல் இருந்து ₹12,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும்
- எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும்
- எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, கூடுதலாக ₹25,000 வழங்க வேண்டும்
- சகதி, குப்பை கழிவுகளை அகற்றுவதுடன் கிருமி நாசினிகளை தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை பழுதி நீக்க, பகுதி வாரியாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து அவற்றை அரசு செலவில் பழுதி நீக்க வேண்டும்
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் இயந்திரங்களுக்கு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.