விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹரியானாவில் மொபைல், இணையதள சேவை (Service Termination) நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தின் அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய மாவட்டங்களின் தொலைபேசி சேவைகள் தவிர, மொபைல் இணைய சேவைகள்,
SMS மற்றும் அனைத்து தொலைதொடர்பு சேவைகளும் பிப்ரவரி 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
.
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக சட்டம் இயற்றுதல், விவசாயிகளின் கடன் ரத்து
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் அதில் உடைப்பாடி எட்டப்படவில்லை
மத்திய அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து பஞ்சாபின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி நேற்று தொடங்கியது.
6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் உடைமைகளை ஏற்றிக்கொண்டும் விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர் .
இதன் எதிரொலியாக டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . விவசாயிகளின் பேரணியைத் தடுக்க
டெல்லியை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் காங்கரீட், முள் வேலி தடுப்புகள் போடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன
டெல்லியை நோக்கி முன்னேறும் விவசாயிகள். சில எல்லைகளில் கான்கிரீட், இரும்பு தடுப்புகளை ஒன்று சேர்ந்து அகற்றி டிராக்டர்களில் டெல்லியை நோக்கி வருகின்றனர்.
அம்பாலா எல்லையில் போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசி வரும் நிலையில், முகக்கவசம் அணிந்தபடி டிராக்டர்களில் செல்கின்றனர்.
2020-இல் நடந்த போராட்டத்திற்கும், இன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்கு இருக்கும் வேறுபாடுகள்
2020ல், மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். அச்சட்டங்கள், 2021ல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2020-21 போராட்டத்தின் போது அனைத்து பயிர்களுக்கும் MSPக்கு சட்ட உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷனின் ஃபார்முலா, விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு
ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தான், தற்போது டெல்லி சலோ போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/ministers-response-to-bjp-on-assembly-issue/
2020 விவசாயிகளின் போராட்டத்தை, பாரதிய கிசான் யூனியன், சம்யுக்த் கிசான் மோர்ச்சா போன்றவை வழிநடத்தின சென்ற போராட்டத்தை முன்னின்று நடத்திய
ராகேஷ் டிகாயிட், குர்னாம் சிங் சாருனி (Service Termination ) ஆகியோர் இந்த டெல்லி சலோவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.