நெல்லை உள்ள களக்காடு சரணாலயத்திற்கு உட்பட்ட நம்பிகோயில் செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ( Forest department ) பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் வணக்கம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு சரணாலய பகுதியில் உள்ள திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட நம்பிக்கோவிலில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து நம்பிகோவிலில் தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி ஆபத்தை உணராமல் பொதுமக்கள் செல்வதை தடுக்க பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது .
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி பிற துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பான ஆலொசணை நடைபெற்ற பின்னரே அனுமதி தொடர்பாக தெரிவிக்கப்படும்.
எனவே நம்பிக்கோவில் சூழல் சுற்றுலாதலத்தில் குளிப்பதற்கும் மற்றும் நம்பிக்கோவில் வழிபாட்டு ( Forest department ) தலத்திற்கும் மறுஉத்தரவு வரும்வரை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் .