சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி நிறத்தை மேம்படுத்தவும், பிக்மண்டேஷன் மற்றும் கரும்புள்ளிகள் ஆகியவற்றை போக்கி சருமத்தை உடனடியாக பொலிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது மஞ்சள் பூசணிக்காய் (pumpkin skin care).
இதை எப்படிடியல்லாம் நம்முடைய சருமத்துக்குப் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பகிர்வில் பார்க்கலாம்.
பூசணிக்காயில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் என்சைம்கள் அதிகமாக இருப்பதால் இவை சருமத்தை மிருதுவாகவும் மென்மையாதாகவும் வைக்க பெரிதும் உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை சருமத்தில் ப்ரீ – ரேடிக்கல்ஸால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும்…?
பொடியாக நறுக்கிய பூசணிக்காயை (pumpkin skin care) சிறிது தண்ணீர் சேர்த்து மை போல அரைத்து, அந்த பேஸ்ட்டுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ள வேண்டும். இது சருமத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்று முதல் பல்வேறு சருமப் பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவுகிறது.
மேலும், அரைத்த பூசணிக்காய் விழுதுடன் அரை ஸ்பூன் பாதாம் அல்லது ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு ஸ்பூன் காபி பொடி சேர்த்து நன்கு கலந்து அதை ஸ்கிரப்பாக முகத்தில் அப்ளை செய்து பத்து நிமிடங்கள் வரை நன்கு ஸ்கிரப் செய்து வருவதால் முகம் பொலிவடையும்.
ஆனால், பருக்கள் உள்ள சருமமாக இருந்தால் அழுத்தி ஸ்கிரப் செய்யக் கூடாது. மிக மென்மையாக ஸ்கிரப் செய்ய வேண்டும். ஸ்கிரப் செய்த பின்னர் பத்து நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட்டு பின் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். மேலும், இதை உடல் முழுமைக்கும் ஸ்கிரப்பாக தேய்த்து குளித்து வரலாம்.