நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் அலுவலகத்தில் (Avudayappan) வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது
எதிர்வரும் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் முக்கிய அரசியல் காட்சிகளை சேர்ந்த சிலரது வீடு மற்றும் அலுவலங்கங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் அலுவலகத்தில் தற்போது வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது
வருமான வரித்துறை சோதனை நடைபெறும் தகவலை அறிந்த திமுகவினர் தற்போது நெல்லையில் உள்ள அலுவலகத்தில் குவிந்த வருகின்றனர்.
Also Read : https://itamiltv.com/8050-polling-booths-are-tense-in-tamil-nadu/
இந்நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறிருப்பதாவது :
திமுக அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர்; இதுபோன்ற சோதனையால் (Avudayappan) எங்களை அச்சுறுத்த முடியாது; நாங்கள் எமர்ஜென்சியை பார்த்தவர்கள் என தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.