உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது .
தர்மசாலாவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வரும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது . இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது .
நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, வில் யங் களமிறங்கினர். அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இணை பும்ராவின் முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்காததால் மெய்டன் ஆனது.
இதையடுத்து ஆட்டத்தின் 4 வது ஓவரை வீசிய பும்ரா, டெவோன் கான்வேவை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார் . பின்னர் 9வது ஓவரை வீசிய ஷமி அதிரடி ஆட்டக்காரரான வில் யங்கை 17 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
3வது விக்கெட்டுக்கு ஜோடி சேந்த ரச்சின் ரவீந்திரன் – டேரில் மிட்செல் இணை இந்தியாவின் பவுலிங்கை பதம் பார்க்க ஆரம்பித்தது . கிட்டத்தட்ட 20 ஓவர்கள் வரை விக்கெட் ஏதும் விழாமல் பார்த்துகொண்ட இந்த ஜோடியை ஷமி உடைத்தார்.
பொறுப்புடன் ஆடி வந்த ரச்சின் ரவீந்திரன் 34வது ஓவரில் 75 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் . அடுத்து வந்த டாம் லாதம் 5 ரன்களில் வந்த வழி செல்ல . மறுபுறம் அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து அசத்தினார்
இறுதி ஓவரில் டேரில் மிட்செல் அடித்த பந்து விராட் கோலி கைக்குள் மாட்ட வேறு வழியின்றி மிட்செலும் பெவிலியன் சென்றார் . இறுதி பந்தில் லாக்கி பெர்குசன் ரன் அவுட்டாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 273 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முஹம்மது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.
வழக்கம் போல் ரோகித் மற்றும் கில் கூட்டணி இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர் . இளம் வீரர் சற்று நிதானமாக ஆட கில் கேப்டன் ரோகித் அதிரடியில் எதிரணியை மிரட்டினார் . அணியின் ஸ்கோர் 71 ரன்கள் இருக்கும் பெர்குசன் ஓவரில் ரோகித் அவுட்டானார். . அடுத்த ஐந்து ரன்கள் அவரை தொடர்ந்து கில்லும் எ தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவர்களை தொடர்ந்து வந்த ஸ்ரேயாஷ் அய்யர் வந்த வேகத்தில் அதிரடி காட்ட 33 ரன்களில் ட்ரென்ட் போல்ட் வீசிய பந்தில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார் . இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி – கேஎல் ராகுல் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்கும் முயற்சியில் இறங்கினர் .
ஆனால் சான்டனர் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி கேஎல் ராகுல் வெளியேற்றப்பட்டார் . பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ரன்கள் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்காக போராடினார். . இந்தப் போட்டியிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 95 ரன்களில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஜடேஜா பவுண்டரி அடிக்க, இறுதியில் இந்திய அணி தனது 5 வது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது . அதேநேரம் நியூஸிலாந்து பெறும் முதல் தோல்வி இதுவாகும்.