அருணாச்சல பிரதேசத்தின் திராங் பகுதியில், இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் (Cheetah helicopter crash) விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் பனிமூட்டத்தால் இந்த ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தகவல்.
இந்த கோர விபத்தில் மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. மேலும், ஹெலிகாப்டரில் இருந்தவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான, விபத்துக்குள்ளான (Cheetah helicopter crash) ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகளை தேடும் பணியில் இந்திய ராணுவ மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடும் பனிமூட்டத்தால், மண்டாலா மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ராணுவத் தரப்பில் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில், 2 ராணுவ உயர் அதிகாரிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டர் காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தற்போது தெரியவந்துள்ளது.