இந்நிலையில் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள திருச்செந்தூர், ஏரல் பகுதிகளில் சேதமடைந்த வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர்.
அதே போல் தொடர் கனமழை எதிரொலியாக சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தாதல் அவர்களில் மீட்ட அரசு நிவார முகாம்களில் தங்க வைத்து நிவாரண உதவிகளையும் செய்து வருகிறது.தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 15,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 49,707 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தமிழ் நாடு அரசு சார்பில் அறிவிக்கபட்டது.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. ஸ்ரீ வைகுண்டம் வட்டத்தில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் ரெயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதோடு ரயில் தண்டவாளங்களும் சேதம் அடைந்தன. இதனால் 800 ரயில் பயணிகள், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.
இதனை அடுத்து நிலையில், பல்வேறு மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள திருச்செந்தூர், ஏரல் பகுதிகளில் சேதமடைந்த வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்த நிலையில், பகுதி சேதம் அடைந்த மற்றும் முழுமையாக இடிந்து விழுந்த வீடுகள் உள்ளிட்ட கணக்கெடுப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளது,