இன்று புதுக்கோட்டை (pudukottai) மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
அதாவது பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கல் பண்டிகையான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஜல்லிக்காடு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை (pudukottai) மாவட்டம் வடமலாப்பூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை திமுக நகரச் செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
https://x.com/ITamilTVNews/status/1747879984717611501?s=20
இந்த போட்டியில் 750 காளைகள், 275 வீரர்கள் பங்கேற்கின்றனர். முதலில் வடமலாப்பூர் கருப்பர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், நார்த்தாமலை கோயில், வடசேரிபட்டி கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தனிநபர் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும், அதிக வாடிவாசல்களைக் கொண்ட மாவட்டமாகவும் புதுக்கோட்டை இருந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழ் நாட்டின் 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியிலும், நேற்று 17ஆம் தேதி இரண்டாவது போட்டியாக ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வன்னியன் விடுதியிலும் பிரமாண்டமாக நடைபெற்றது.