நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ( CBCID ) செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் (60) மரணம் தொடர்பான வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகள், ஜெயக்குமாரின் ஒரு செல்போன், கருகிய டார்ச் லைட், கத்தி உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நடந்த விசாரணையும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஜெயக்குமாரின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு விஸ்ரா பரிசோதனைக்காக மதுரை மற்றும் பெங்களூருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Also Read : பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்..!!
இதற்கிடையே இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் போக்கு மற்றும் விசாரணை குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் தென்மண்டல ஐஜி கண்ணன் ஆகியோர் தொடர்ந்து நேரடியாக கண்காணித்து வருகின்றனர். வழக்கு விசாரணை விவரங்களை போலீசார், காவல்துறை வாட்ஸ் அப் குரூப்பில் பகிரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலை நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் இந்த மரண வழக்கில் எந்தவித துப்பும் கிடைக்காததால் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
.
ஜெயக்குமார் எழுதியாக கைப்பற்றப்பட்ட கடிதத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை ( CBCID ) நடத்தியும் துப்பு துலங்கவில்லை என்பதால இனி இந்த வழக்கை பல கோணங்களில் சிபிசிஐடி விசாரிக்கும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.