கருணாநிதியின் மகள் என்ற பெயரில் ஓசியில் வாழும் (Annamalai angry) கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :
கனிமொழி தனது தந்தை கட்டிய வீட்டில் தங்கியிருக்கிறார். கனிமொழி உழைத்து எதாவது சம்பாதித்துள்ளாரா?
கருணாநிதியின் மகள் என்கிற பெயரில் ஓசியில் வாழ்கிறார். கனிமொழிக்கு பிரதமரைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அப்பா பெயரை வைத்து வாழ்ந்து வரும் கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேச எந்த ஒரு தகுதியும் கிடையாது.
கருணாநிதி என்கிற வார்த்தையை தூக்கிவிட்டால் கனிமொழி யார்? கனிமொழி இதுபோன்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என கடும் கோபத்துடன் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய கனிமொழி எம்.பி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை. ஆனால், தேர்தல் வருவதால் தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார்.
அவர் தமிழகத்திலேயே குடியேறினாலும், அவருக்கு (Annamalai angry) தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார்.