தமிழகத்தில் இன்று காலை வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி (edappadi palaniswami) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று காலை வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (edappadi palaniswami) வாழ்த்துகளைத் தெரிவித்து தன்னுடைய டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “தமிழ்நாட்டில் இன்று வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர் அனைவருக்கும் உங்கள் எதிர்காலம் சிறந்து புதிய உச்சங்களை தொட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், முதல் முயற்சியில் பெறுவது மட்டுமே வெற்றியல்ல,ஒருவேளை வெற்றியை தவற விட்டிருந்தாலும் உங்கள் விடாமுயற்சியால் தேர்விலும் வாழ்விலும் புதிய வெற்றிகளை பெற்று வருங்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.