கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் (KKSSR Speech) திமுகவினர் கொடியேற்றி, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி நிகழ்வை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் தி.மு.கவின் 100 வது கொடியேற்றும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு மாநகர திமுகவின் சார்பாக தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
திருச்சியில் கொடியேற்று விழா :
இந்நிகழ்வில் தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கொடியேற்றி 80 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர் லீலாவேலு, மாமன்ற உறுப்பினர்கள் கழகத்தினர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சிறப்புரை:
(KKSSR Speech) இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது :
அன்பில் மகேஷ் பொய்யாமொழி இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். சிலர் செயல்படுவார்கள், ஆனால் பேசத் தெரியாது. எல்லாம் ஒரு சேர அமைந்திருப்பவர் மகேஷ் பொய்யாமொழி.
தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு புகழாரம்
தலைவர் எல்லா மாவட்டங்களிலும் 100 கொடிகள் ஏற்ற வேண்டும் என அறிவித்தார். ஆனால் நாங்கள் பின்தங்கி தான் உள்ளோம். ஆனால் திருச்சியில் மகேஷ் பொய்யாமொழியோ அதை எட்டி விட்டார்.
Also Read :https://itamiltv.com/devotees-are-allowed-to-visit-saduragiri/
இந்த கட்சியை 50 வருடத்திற்கு யாராலும் அசைக்க முடியாது. இந்த இயக்கம் மக்களுக்கான இயக்கம்,
தமிழ் சமுதாயம் உணர்வோடு வாழ வேண்டும் என்றால் இந்த இயக்கம் இருந்தாக வேண்டும் என்ன அமைச்சர் தெரிவித்துள்ளார் .
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் கலைஞர் நூற்றாண்டு விழா சீரும் சிரிப்புமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை மறுநாள் சேலத்தில் திமுகாவின் மாபெரும் இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.