திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன்கள், சித்தி ( Tirupur murder ) ஆகியோரை படுகொலை செய்த 4 பேர் கும்பலுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள கள்ளக்கிணறைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது தம்பி செந்தில்குமார். இவர்களின் தாய் புஷ்பவதி மற்றும் சித்தி ரத்தினாம்பாள் ஆகியோர் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி இரவு மோகன்ராஜ் வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து வெங்கடேஷ் அம்ற்றும் அவரது நண்பர்கள் செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அதனை மோகன்ராஜ் தட்டிக் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்து கிளம்பிச்சென்ற செல்லமுத்து உள்ளிட்டோர் மேலும் இருவருடன் வந்து மோகன்ராஜின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு, அவரை தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனைத் தடுக்க வந்த தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் மற்றும் தம்பி செந்தில்குமார் ஆகியோரையும் போதையில் இருந்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து படுபாதகச் செயலலில் ஈடுபட்ட அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
Also Read : https://itamiltv.com/jp-natta-road-show-today-in-musiri/
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வெங்கடேஷ், அவரது தந்தை ஐயப்பன், செல்லமுத்து, தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த சோனைமுத்தையா, செல்வம் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். படுகொலை தொடர்பான வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது கைது செய்யப்பட்ட 5 பேரையும் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா, ஐயப்பன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் செல்வம் என்பவருக்கு குற்றவாளிக்கு அடைக்கலம் அளித்தது, தடயங்களை ( Tirupur murder ) அழித்தது ஆகிய குற்றங்களுக்கு இரண்டு முறை 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும் மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.