நீட் தேர்வினால் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை என நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் விருது வழங்கி பாராட்டி வருகிறார்.
கல்வி விருது விழா என பெயரிடப்பட்டுள்ள இந்த விழாவின் முதல் பாகம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் இந்த விழாவின் இரண்டாம் பாகம் சென்னை திருவான்மியூரில் இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது .
இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கிய விஜய் கூறியதாவது :
நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழு மனதுடன் ஏற்கிறேன். நீட் தேர்வினால் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் ஒரே நாடு ஒரே பாடம் ஒரே கல்வி என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.
மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு NCERT முறையில் தேர்வு வைத்தால் எப்படிச் சரியாக இருக்கும் மத்திய அரசால் நடத்தப்படும் இந்த தேர்வில் தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளில் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என விஜய் தெரிவித்துள்ளார்.