குடும்பத் தகராறில் பிருந்திருந்த மனைவியை ஒன்று சேர்ந்த அன்றே கத்தியால் குத்திவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட விபரீதம் ராமநாதபுரத்தில் அரங்கேறி உள்ளது..
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/MURDERED-01.jpg?resize=1024%2C576&ssl=1)
ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 41). கொத்தனாராகப் பணி செய்து வருகிறார். இவருக்கு சரண்யா (38) என்ற மனைவியும் அஜய் (16) என்ற மகனும், அக்சிதா (16) என்ற மகளும் உள்ளனர்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததால, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிள்ளைகள், உறவினர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ கணவனும் மனைவியும் முடிவெடுத்துள்ளனர். இதன்படி வெள்ளிக்கிழமை கணவனும் மனைவியும் ஒன்றாகி ஒரே வீட்டில் இருந்துள்ளனர். ஆனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/MURDERED-03.jpg?resize=1024%2C576&ssl=1)
இதன்காரணமாக ஆத்திரத்தில் இருந்த பன்னீர்செல்வம், மனைவி சரண்யாவை கத்தியால் சரமாரியாகக் குத்தி கொலை செய்திருக்கிறார்.
பின்னர், அதே கத்தியால் தனக்குத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரத்தவெள்ளத்தில் கணவனும், மனைவியும் சடலமாகிக் கிடப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் கேணிக்கரை போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அவர்கள் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/MURDERED-04.jpg?resize=1024%2C576&ssl=1)
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.
இரண்டு ஆண்டாகப் பிரிந்து வாழ்ந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்த அன்றே மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ”ராகுல் காந்தியை கிண்டல் செய்த ரஷ்ய செஸ் வீரர்..” கடுப்பான காங்கிரஸ்!