பிரபல நடிகர் பிந்து நந்தாவிற்கு (pintu nanda) கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு பின்னர் திடீரென்று அவர் உயிரிழந்த சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரிசா நடிகரான பிந்து நந்தா (pintu nanda) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர். அதன் பின்னர், 1996 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் நுழைந்த இவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் மிகவும் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகர் பிந்து நந்தாவிற்கு 45 வயதாகும் நிலையில், கடந்த சில வருடங்களாக கல்லீரல் பாதிப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக, டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலிரி சயின்ஸ் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், பிந்து நந்தாவின் குடும்ப நண்பர் ஒருவர் பிந்து நந்தாவிற்கு கல்லீரல் தானம் கொடுக்க முன் வந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் பிந்து நந்தாவிற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின்னர், தொடர்ந்து ICU-வில் இருந்த பிந்து நந்தாவிற்கு ரத்தம் ஒவ்வாமை, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி மார்ச் 1ம் தேதி இரவு பிந்து நந்தா உயிரிழந்தார்.
இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.