நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு மத்திய அரசு Padma Bhushan விருது அறிவித்துள்ளது.
நடிப்பு அரசியல் என இரண்டிலும் கொடி கட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த. நுரையீரல் அழற்சி காரணமாக நீண்டு நெடு நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் காலமானார் .
கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு தமிழகமே இன்று வரை சோக கடலில் மூழ்கியுள்ளது.
அவரது உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்கு தான் மிக பெரிய கூட்டம் வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து தற்போது விஜயகாந்தின் நினைவிடத்தில் தொண்டர்கள் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் திரையுலகில் ஆற்றிய பணிக்காக்காகவும் பொது வாழ்வில் மக்களாக செய்த பல நல்ல விஷயங்களுக்காகவும் அவருக்கு Padma Bhushan விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
Also Read : https://itamiltv.com/how-is-malaikottai-valiban-movie/
வாழும் போதும் சரி இறந்த பின்பும் சரி பலருக்கு கடவுளாக வாழ்ந்த அவருக்கு இந்த விருது நிச்சயம் கொடுக்கப்பட வேண்டியவை என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதேபோல் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுடன் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி,
சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உட்பட 5 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், மருத்துவர் ஜி.நாச்சியார், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா,
கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா உள்ளிட்ட 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.