பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. கடந்த 2 ஆம் தேதி கராச்சியில் தொடங்கிய போட்டியில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 449 ரன்கள் குவித்தது. அதிகபடியாக கான்வே 122 ரன்களும், பலன்டல் 51 ரன்களும், ஹென்றி 68 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணியில் அபர் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா,, சல்மான் தலா 3 விக்கெட்டும் கைபற்றினர்.
தொடர்ந்து முதலாவது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 408 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சவுத் ஷகீல் 125 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார், மேலும் இமாம் 83 ரன்னும்,சர்பராஸ் 78 ரன்னும் சேர்க்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இறுதியில் பாகிஸ்தான் 41 ரன்கள் மட்டும் பின்தங்கியிருந்தது.
இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடிய நியூசிலாந்து 4 ஆம் நாள் ஆட்ட முடிவில் 277 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 318 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக கொடுத்தது. நான்காம் நாள் இறுதியில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் தொடர்ச்சியாக 2 விக்கெட்டை இழந்து அந்த நாள் ஆட்டத்தை முடித்தது.
கடைசி நாளான நேற்று களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே நிதானமாக விளையாட ஆரம்பித்தனர். இருப்பினும் நியூசிலாந்தின் சுழல் பந்தின் தாக்கத்தால் விக்கெட் சரிய தொடங்கியது. எப்படியும் போட்டியை வெள்ள வேண்டும் என்று நியூசிலாந்து அதிரடியான பந்து வீச்சை முன்னெடுத்தது, மேலும் பேட்ஸ்மேன்களை சுற்றி பீல்டர்களை நிற்க வைத்து பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
நிலைமையை உணர்ந்த சர்பராஸ் விக்கெட் சரிய விடாமல் துடுப்பாட்டம் ஆடினார். மறுமுனையில் மற்றொரு பேட்ஸ்மேன் சவுத் ஷகீல் தடுப்பட்டத்தை மேற்கொண்டார். இருவரின் நிதான ஆட்டத்தால் பாகிஸ்தான் சற்று சரிவிலிருந்து மீண்டது. சிறப்பாக ஆடிய ஷகீல் 146 பந்துகளில் 32 ரன்கள் அடித்து விக்கெட் சரிவை தடுத்தார்.
மறிமுனையில் நிலைத்து ஆடிய சர்பராஸ் சீராக ரன் குவிக்க அணியின் நிலை மாறியது. இறுதிவரை சர்பராஸ் 176 பந்தில் 118 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினார். இறுதியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு போட்டியை டிரா செய்தனர். இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.