நடப்பாண்டின் கோடைகாலம் டெல்லிக்கு சாபமாய் அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ( delhi temperature ) இருந்து படிப்படியாக உயர்ந்துவரும் வெப்பநிலை மக்களை படாதபாடு படுத்தி வருகிறது .
பகலில் சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சம், இரவு 7 மணி வரை மங்குவதில்லை. இதன்காரணமாக இரவிலும் கதகதப்பில் இருப்பது போலவே இருப்பதாக டெல்லி வாசிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர் .
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக டெல்லியில் வெப்பநிலை மிகவும் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் 122 டிகிரி அளவுக்கு வெப்பம் உயர்ந்தது. தமிழ்நாட்டில் 110 டிகிரிக்கு மேல் உயர்ந்தாலே கடுமையான வெப்பமாக தெரியும். ஆனால் அதைவிட 10 டிகிரிக்கும் மேல் டெல்லியில் வெப்பம் நிலவி வருகிறது.
Also Read : ஆம்புலன்ஸ் ஆக மாறிய அரசுப் பேருந்து – கேரளாவில் நடந்த திக் திக் சம்பவம்..!!
டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 126 டிகிரி ஆகும். சமீப காலங்களில் நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுதான். டெல்லியின் புறநகர் பகுதியான முங்கேஷ்பூர் இந்த வெப்பநிலையை பதிவு செய்திருக்கிறது.
இந்த அதிகபட்ச வெப்பநிலைக்கு ராஜஸ்தானில் இருந்து வீசும் வெப்ப காற்றலையே காரணம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இந்த ( delhi temperature ) கோடை காலம் எப்பதான் முடிவுக்கு வருமோ என பொதுமக்கள் வருத்ததுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.