தூத்துக்குடி மருத்துவகல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் 65 வயதான பேராசிரியர் உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா (27 இவர் சென்னை தனியார் கல்லூரியில் இளநிலை மருத்துவம் முடித்து, 2 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்த சுகிர்தா அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி சுகிர்தா வகுப்பிற்கு செல்லாமல், அறை விடுதியிலே தங்கினார். இத னால் சக மாணவிகள், விடுதி அறைக்கு சென்று பார்த்த போது, கதவு பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையின் உதவியுடன் கதவின் பூட்டை உடைத்து பார்த்த போது, மாணவி சுகிர்தா சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு சுகிர்தாவின் உடல் அனுப்பி வைக்கபட்டது.
இதில் அறுவை சிகிச்சையின்போது தசைகளைத் தளர்வடையச் செய்யும் மருந்தை, தனக்குத் தானே ஊசி மூலம் செலுத்தி மாணவி தற்கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவி தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது, தற்கொலைக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது. அதில், 65 வயதான பேராசிரியர் பரமசிவன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சுகிர்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனியர் மாணவர்களான ஹரீஷ் மற்றும் பிரீத்தியும் மன ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்ததாக சுகிர்தா அழுத்தி இருந்தார் இதனை அடுத்து 65 வயதான பேராசிரியர் உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.