மக்களவைத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி ( Vivekananda rock ) இன்று விவேகானந்தர் பாறையில் 2வது நாள் தியானத்தைத் தொடங்கியுள்ளார் .
இறுதி கட்டத்தை எட்டியுள்ள மக்களவை தேர்தலில் நாளை ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது . இதையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது .
இந்நிலையில் கன்னியாகுமரில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய நேற்று ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிய பிரதமர் மோடி அங்கு 45 மணி நேரத்திற்கு மேல் தியானத்தில் இருந்தார் .
Also Read : போலி வணிகப் பரிவர்த்தனைகள் : அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பு..!!
இதையடுத்து 2 ஆம் நாளான இன்று விவேகானந்தர் பாறையில் இருந்தபடி சூரிய உதயத்தை கண்டுகளித்த பிரதமர் மோடி மீண்டும் தியானத்தில் ஈடுபட்டுள்ளார் .
இதையடுத்து நாளை மாலை 4 மணியளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி ( Vivekananda rock ) படகுமூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .