பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு (Heavy Protection) சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தமிழ்நாடு வருகிறார் .
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி
சென்னையில் முதல் முறையாக நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நேரு விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ராஜ் பவனில் பிரமர் மோடி
பின்னர் ராஜ் பவனில் ஓய்வெடுக்கும் பிரமர் மோடி இதனைத் தொடர்ந்து அவர் மறுநாள் காலை 20ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார்.
திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம்
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு மீண்டும் சாலை மார்க்கமாக புறப்பட்டு ஹெலிபேட் உள்ள இடத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் (Heavy Protection) ட்ரோன், ஆளில்லா விமானங்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
Also Read : https://itamiltv.com/actress-nayanthara-expresses-regret-on-annapurani-issue/
இதுமட்டுமின்றி பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் தமிழகத்தில் கால் வைத்து மீண்டும் டெல்லிக்கு புறப்படும் வரை எந்த வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏரளமான போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.