தமிழர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடபட்டு பெறுகிறது . தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல 120 நாட்களுக்கு முன்பாகவே விரைவு ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கும்.
அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15,16 மற்றும் 17ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் அவரவர் ஊர்களுக்கு செல்ல விரைவு ரயில்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது .
இதற்காக பொதுமக்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செப்டம்பர் 13ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 11ஆம் தேதியும், நாளை செப்டம்பர் 14ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12ஆம் தேதியும் ரயிலில் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதாவது, செப்டம்பர் 15 மற்றும்16 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்யும் நபர்கள் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரயிலில் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17ஆம் தேதி முன்பதிவு செய்யம் பயணிகள் தைத் திருநாளான ஜனவரி 15ஆம் தேதி ரயிலில் பயணம் செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு முன்கூட்டியே தங்களுடைய பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.