மணிரத்தினம் அவர்களின் பொன்னியின் செல்வன்( ponniyin selvan ) திரைப்படம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்ததிரைப்படம் பிரம்மாண்டமான ஓப்பனிங் பெற்று பாக்ஸ்ஆபிஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரம் மிகச் சிறப்பாக உள்ளதாகப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.குறிப்பாக ஐஸ்வர்யாராய் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக அனைவரும் சொல்கின்றனர். இந்த கதாபாத்திரத்தில் இதற்கு முன் யார் நடித்திருக்கக் கூடும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது
1980ல் இந்த திரைப்படத்தை முன்னரே எடுக்க நினைத்த மணிரத்தினம் நந்தினி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரேகாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.பழுவுர் ராணியாக வரும் நந்தினி கதாபாத்திரத்திற்கு ரேகாவே முன்னர் பேசப்பட்டதாகவும் பிறகு இருவர் மற்றும் ராவணன் திரைப்படத்திற்குப் பிறகு தற்போது இந்த கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராய்க்குத் தரப்பட்டதாக மணிரத்தினம் கூறியுள்ளார்
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காகப் பேட்டியளித்த இயக்குனர் மணிரத்தினம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.மேலும் இந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யராய் சிறப்பாக நடித்திருப்பாதாகவும் அவர் கூறியுள்ளார்.