சிறையில் சொகுசுக்காக பப்ஜி மதன் லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பப்ஜி மதனுக்கு சிறையில் சகல வசதிகளை செய்து கொடுக்க, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக கூகுள் பே மூலமாக ₨25 ஆயிரம் அனுப்பிய தகவலும் வெளியாகி உள்ளது குறித்து சிறைத்துறை டிஜிபி விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு மூலம் மோசடி செய்த விவாகரத்தில் கைது செய்யப்பட்ட மதன், தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவர்களிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்து தர அவரது மனைவி கிருத்திகா பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் அதிகாரி பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், சிறை அதிகாரி மதனின் மனைவியிடம் பணம் கேட்டதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ரூ.25ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் சிறை அதிகாரிக்கு மதனின் மனைவி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளியான ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.