தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை (Holiday) அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளதை அடுத்து . தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி பொதுவிடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது . இதன்காரணமாக நாடே திருவிழா போல் விழாக்கோலம் பூண்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/income-tax-department-raided-the-office-of-ex-speaker-avudayappan/
இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது . இதற்கிடையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது .
இதையடுத்து தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில் பொது விடுமுறை அறிவித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த அரசனையும் தெப்போது வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் (Holiday) நிலையில் தற்போது அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது