பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் டிடிஎஃப் வாசன் அத்துமீறி நடந்து கொண்டதற்காக அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனது விலையுயர்ந்த பைக்கில் அதிவேகமாக சென்று வீலிங் சாகசம் செய்யமுற்பட்டபோது பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார் .
இந்த கோர விபத்தில் வாசனுக்கு சிறு சிராய்ப்புகள் மற்றும் கை எலும்பு முறிவு ஏற்படுத்து தற்போது சிகிச்சையில் உள்ளார் . மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பைக் ஓட்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி பறக்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது .
இதையடுத்து டிடிஎஃப் வாசன் மீது அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் சிக்கி சேதமடைந்த பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர் .
இந்நிலையில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் டிடிஎஃப் வாசன் அத்துமீறி நடந்து கொண்டதற்காக அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அதிவேகமாக பைக் ஓட்டுதல் ஆதரவாளர்களுடன் கூட்டம் சேர்த்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற காரணத்திற்காக வாசன் மீது பல வழக்குகள் இருந்த நிலையில் தற்போது வாசன் மீது அதிகரித்துள்ள குற்றச்சாட்டு காரணமாக அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது .