குஜராத் மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சரத்குமார் (sarathkumar) கலந்துகொண்டு எழுச்சி உரையாற்றியுள்ளார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் பாரத நாட்டில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் நாடே விழா கோலம் கொண்டுள்ளது.
நாட்டில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அனைத்தும் தங்களது சக்திக்கு மீறி மக்களின் மனதை கவர வீதியில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் கடந்த 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் உரிய பாதுகாப்புடன் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.
Also Read : ”திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு ஆபத்து..” – அண்ணாமலை!
இம்முறை திராவிட கட்சிகளை தாண்டி பாஜகவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக முதல் முறை வாக்களிப்பவர்கள் மத்தியில் அண்ணாமலை உள்ளிட்ட இளம் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் பெரியளவில் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அவர்கள் தனது கட்சியினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைத்து தனது மக்கள் சேவையினை நாடு முழுவதும் செய்ய முன்வந்தது பலராலும் பாராட்டத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களில் மக்களவை தேர்தல் அடுத்தடுத்து நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு உள்ளனர்.
Also Read : பழனி கோவிலில் திடீரென குவிந்த ஜப்பானியர்கள்.. காரணம் என்ன?
இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணிநகர் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சரத்குமார் கலந்துகொண்டு எழுச்சி உரையாற்றியுள்ளார்.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை தரும் வகையில் அமைந்துள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துச்சொல்லி தீவிரப்பரப்புரையில் ஈடுபட்ட சரத்குமாரின் (sarathkumar) பேச்சு அங்குள்ள பாஜகவினருக்கும் பொதுமக்களுக்கும் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது .