Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home அரசியல்

அரியலூரில் எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை உடனே நிறுத்திடுக – சீமான் வலியுறுத்தல்

by bhoobalan
October 22, 2023
in அரசியல், தமிழகம்
0
அரியலூரில் எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை உடனே நிறுத்திடுக – சீமான் வலியுறுத்தல்

அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துசீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்று கழகம் (ONGC – Oil and Natural Gas Corporation) அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் கிணறு தோண்டுவதற்காக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த இந்திய ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே அரியலூர் பகுதிகளில் இயங்கிவரும் பைஞ்சுதை (சிமெண்ட்) தொழிற்சாலைகள் தங்களின் தேவைக்காக தோண்டி எடுக்கும் சுண்ணாம்புச் சுரங்கங்களால் குற்றுயிராக காட்சியளிக்கும் அரியலூர் மாவட்டத்தினை முற்றாக அழித்தொழிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அறிவிப்பு வன்மையானக் கண்டனத்துக்குரியது.

வேளாண் பெருங்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று முந்தைய அதிமுக அரசு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி சமவெளிப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அன்றைய அதிமுக அரசு அறிவித்ததையடுத்து, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களால் அச்சமடைந்திருந்த விவசாயப் பெருங்குடி மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், அதிமுக அரசால் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டபோது முந்தைய அறிவிப்புக்கு மாறாக திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விடுபட்டிருந்தது பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. மேலும், அந்தச் சட்டத்தின் 4(2)(a) பிரிவானது, அச்சட்டம் செயற்பாட்டுக்கு வரும்முன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடரும் என்று கூறப்பட்டிருந்தது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைச் சுட்டிக் காட்டி அரசின் முடிவை நாம் தமிழர் கட்சி அப்போதே கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விடுபட்டதை வாய்ப்பாக பயன்படுத்தி தற்போது 10 இடங்களில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சி நிறுவனம் முனைவது வேளாண் பெருமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 1984ம் ஆண்டிலிருந்து ஒ.என்.ஜி.சி நிறுவனம் இயற்கை எரிகாற்று மற்றும் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து வரும் நிலையில், தற்போதுவரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 187 கிணறுகள் (திருவாரூரில் 78, நாகையில் 57, தஞ்சையில் 12, கடலூரில் 4, அரியலூரில் 1, இராமநாதபுரத்தில் 35) என மொத்தமாக 187 கிணறுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 2019ம் ஆண்டில் மட்டும் தமிழகம், புதுவையில் வேதாந்த நிறுவனம் 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி 215 கிணறுகளும் என மொத்தமாக 489 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

அரசு அறிவித்துள்ள கொள்கையின்படி, ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள் மற்றும் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட அனைத்துக்கிணறுகளும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்க்கிணறுகளாக இருக்கும் கிணறுகளில்கூட, நாளை நீரியல் விரிசல் (Hydraulic fracking) முறைப்படி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள முடியும்.

இந்தப் புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கும் 768 கிணறுகளையும் தடை யின்றிச் செயல்பட அனுமதிப்பதுதான் அரசின் திட்டமென்றால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்ற முந்தைய அதிமுக அரசின் பேரறிவிப்பு வெற்று கண்துடைப்பாகிவிடும். மேலும், நிலமும், வேளாண்மையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், எரி எண்ணெய், ஹைட்ரோ கார்பன் போன்ற கனிமங்கள் இந்திய ஒன்றிய அரசின் கீழ் வருவதால் 2019 ம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எண்ணெய் கிணறு போன்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதியே போதுமென்றும், மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதியைத் தனியாகப்பெறத் தேவை யில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எண்ணெய் கிணறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை என்றாகிவிடுகிறது.

அதனடிப்படையிலேயே தற்போது அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 10 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

ஆகவே, அரியலூர் மாவட்டத்தை முற்று முழுதாக அழித்தொழிக்கும் கொடுந்திட்டமான புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தினை தடுத்து நிறுத்த, உடனடியாக அரியலூர் மாவட்டத்தினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை நீர்த்துபோகச் செய்யும் பாதகமான சட்ட உட்பிரிவுகளை உடனடியாக நீக்குவதோடு, கெயில், சாகர் மாலா, ஹைட்ரோ கார்பன், எண்ணெய் கிணறு என்று வெவ்வேறு பெயர்களில் வேளாண் நிலங்கள், நீர் நிலைகள், நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு திட்டத்தையும் புதிதாக தொடங்கவோ அல்லது ஏற்கனவே கைவிடப்பட்ட திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவோ தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.

அதோடு, மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையைப் பாதிக்கக் கூடிய இந்திய ஒன்றிய அரசின் முடிவுகளுக்கு எதிராக வெறுமனே கடிதம் மட்டும் எழுதாமல், பாராளுமன்றத்தில் தங்களுக்குள்ள எண்ணிக்கைப் பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி திமுக அரசு உறுதியான அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு அவற்றைத் திரும்பப்பெறச் செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான நோக்கத்தை முழுமைப்படுத்தி தமிழ்நாட்டு விவசாயிகளையும், விவசாயத்தையும் காத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அரியலூர் மட்டுமின்றி தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மக்களையும், மண்ணையும் பாதிக்கக்கூடிய எண்ணெய் கிணறு உள்ளிட்ட எந்தவொரு திட்டத்தையும் இந்திய ஒன்றிய அரசு செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணைப்போகக் கூடாதென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: NTKpolitical newsseeman
Previous Post

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

“பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது” – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

Related Posts

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

May 9, 2025
BJP vs admk
அரசியல்

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
karnataka
தமிழகம்

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – பந்தயத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!!

May 1, 2025
AIADMK ques
அரசியல்

“இதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க முதல்வரே” – அதிமுக சரமாரி கேள்வி

April 29, 2025
government officials
தமிழகம்

சொன்னதை செய்யாத அரசு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்..!!

April 28, 2025
government employees
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு முதல்வரின் மெசேஜ் – 110 விதியின்கீழ் 9 முக்கிய அறிவிப்புகள்

April 28, 2025
Next Post
“பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது” – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

“பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com