அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு (Senthil balaji) ஜாமின் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார்.
அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை (Senthil balaji) கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு இதய பாதிப்பு ஏற்படவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராக தற்போது செந்தில் பாலாஜி நீடிக்கிறார்.
செந்தில் பாலாஜியின் வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படியுங்க : https://itamiltv.com/full-details-for-pongal-special-bus-from-chennai-city/
இதனைத் தொடர்ந்து 3-வது முறையாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது
இந்த வழக்கு வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். அல்லி முன்பாக கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது.
இது தொடர்பான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், (12ம் தேதி) இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
https://x.com/ITamilTVNews/status/1745702799814615374?s=20
இந்த நிலையில் 3வது முறையாக ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்