வார இறுதி நாட்களில் இயக்கப்படும்க் சிறப்பு பேருந்துகளை ( Monitor ) கண்காணிக்க தனிக்குழு அமைப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது .
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
நாளை 17/02/2024 (சனிக்கிழமை) 18/02/2024 (ஞாயிறு) மற்றும் திங்கட்கிழமை முகூர்த்தம் உள்ளிட்ட நாட்களை முன்னிட்டு மற்றும் 16/02/2024 வெள்ளிக்கிழமை இன்று சென்னையிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும்
வழக்கத்தை விட அதிகமான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும்
சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் 16/02/2024 இன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகளும்
மேல குறிப்பிடப்பட்டுள்ள இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூரிலிருந்தும் பிற இடங்களுக்கு 200 சிறப்பு என மொத்தம் 750 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது போக ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 9,679 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் .
இதில் சனிக்கிழமை 5,468 மற்றும் ஞாயிறு அன்று 8,481 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு
www.tnstc.in மற்றும் Mobile App Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை ( Monitor ) கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Also Read : https://itamiltv.com/madurai-hc-bench-has-released-m-k-azhagiri-in-the-case-of-hitting-tasildhar-in-2011/
எனவே, பயணம் குறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது புகார்கள் இருந்தால் பயணிகள் அவர்களிடம் தாராளமாக தெரிவிக்கலாம் .
தமிழக அரசால் இயக்கப்படும் இந்த சிறப்பு பேருந்து வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது பயணத்தினை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.