தமிழக அரசால் அங்கீகரிக்கப்படாத தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான ( vechile sticker ) கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்படாத அடையாள ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் முதற்கட்டமாக காவல்துறை என ஸ்டிக்கர் ஒட்டி உள்ள வாகனங்களை நிறுத்தி சோதனையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்..!!
இதுமட்டுமின்றி ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளலாம் என்றும் அரசு அங்கீகாரம் செய்த அந்த செய்தி நிறுவனத்தின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
யூ டியூப்பர்ஸ் பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு ஒருவர் பெயரில் ( vechile sticker ) இருந்து ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் முதல் தடவை ₹500 ,இரண்டாவது முறை ₹1500 அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் ஸ்ட்ரிக்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது .