எதிர்வரும் ஜூன் 24ஆம் தேதி மானிய கோரிக்கை தொடருக்கான சட்டப்பேரவை கூட்டம் தொடங்கப்படவுள்ளதாக ( TN Assembly ) சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார் .
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் கடந்த 3 மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் சூழலில் ஜூன் 24ஆம் தேதி மானிய கோரிக்கை தொடருக்கான சட்டப்பேரவை கூட்டம் தொடங்கப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார் .
Also Read : களக்காடு சரணாலயத்திற்கு உட்பட்ட நம்பிகோயில் செல்ல வனத்துறை தடை..!!
பேரவை கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் எனவும், எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
நடப்பாண்டில் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22ஆம் தேதி வரை ( TN Assembly ) சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.