காஞ்சிபுரத்தில் (kanchipuram) நாளை மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது…
உலகம் முழுவதும் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும், ஒரு நாளுக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற நாள் தான் மே தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் (kanchipuram) மே தினத்தை முன்னிட்டு நாளை (01.05.2023) மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்து உள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின் படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (01.05.2023 திங்கட்கிழமை) மே தினத்தன்று நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த அறிவிப்பினை தொடர்ந்து, நாளை (01.05.2023 திங்கட்கிழமை) மே தினத்தன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்” என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.