வெஸ்டின்ட்ஸ் நாட்டில் நேற்று நடைபெற்ற 2024 டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
திட்டத்தட்ட 1 மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற 2024 டி20 உலக கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று லீக் , சூப்பர் 8 மற்றும் அரையிறுதி என ஒவ்வரு அணியாக வெளியாகி நேற்று நடைபெற்ற இறுதியில் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
Also Read : ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு..!!
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பொறுப்புடன் ஆடி 176 ரன்கள் சேர்த்து. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி இறுதி வரை போராடி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் கோப்பைக்காக பல வருடம் போராடிய இந்திய அணி இம்முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது.